Thursday, December 30, 2010

கனவான்களே

மூழ்கி கொண்டிருக்கிறது கப்பல்
எவ்வளவு அழகாக வேடிக்கை பார்கிறார்கள்.
உதவி என்ற பெயரால் வீசப்படும் வலைகள்
எல்லாம்
தேர்தலை நோக்கி வீசப்படும் எச்சி எலும்புகள்.
அந்த சாரிகள்
இந்த சாரிகள்
நடுநிலையாளர்கள்
சனநாயகவாதிகள்
நிறுத்துங்கள் அய்யா உங்கள் பெரும் பேச்சை.
உங்கள் உறுஞ்சு குழல் உருஞ்ச இன்னும் எங்களிடம்
என்ன இருக்கிறது என்று நினைகிறிர்கள்.
உங்களை கண்டு பொந்துகளிலும் புதருகளிலும் ஒளிந்து
கொண்டிருக்கும் மக்களின் இதையங்கள் கருகும் வாடை
நாசி துவாரங்களை துளைக்க வில்லையா.
மனம் மீள முடியா துயரத்துள் எம்மக்களை
வீழ்த்திவிட்டு.
பைகட்டுகளை நிரப்பிக்கொண்டு செல்லும் கனவான்களே.

Sunday, November 14, 2010

கனவுகளின் பூங்காவம்

கனவுகளின் பூங்காவனத்தை பார்வையிட்டுக்
கொண்டிருந்தேன்.
அழகான கனவொன்று என்னை பார்த்து
புன்னகைத்தது.
அந்த கனவை பறித்து என் இதையத்துல்
சூடிக்கொண்டேன்.
பிறகுதான் கண்ணில் பட்டது அந்த பலகை
கனவுகளை பரிக்காதீர்கள்

Saturday, June 26, 2010

ஏன் மனம் நினைவு கூறுகிறது இப்பொழுது ?

கண்ணீரைத் துடைத்து
தலைமுடியை கோதிவிட்டு
சிவந்த உள்ளங்கையில் முத்தம்மிட்டு
பரிவுடன்  இந்த கையிலா டீச்சர்
அடித்தார்கள் என்று கேட்ட குரலை
மனம் ஏன் இப்பொழுது நினைவு கூறுகிறது

Monday, March 15, 2010

குவளை வழிய வலியச் சிறுகதை

மா பூவே ,மகிழம் பூவே,எங்குவாப்பா,பசியாரிட்டியலா........   
என்  நினைவில் அமர்ந்து  இருக்கும் இனிய சொற்களே. உங்களை உதிர்த்தவர் வெகு நாட்களுக்கு முன்பே மறித்துப் போய்விட்டார். அவர் பெயரில் உள்ள வசிகரம்மும் அவர் பெயரை பலமுறைச் சொல்லிப் பார்க்கத்தூண்டும் . அந்த இனிமையான பெயர் கொம்புத்தொப்பி மா. உங்களுக்கு விசித்திர கருப்பு தெரியுமா அதுதான் அவர் நிறம். ஓலைப் பாயை போன்று மொற மொறப்பான தோள்கள். வெயிலில் நடந்து வரும் போது  நன்றாக எண்ணை தேய்த்ததை போன்று கையும் முகமும் மினுங்கும். வெள்ளை நிற எட்டுமொல வேஷ்டியை அழகாக உடல்முழுக்க சுற்றி தலையை மூடி இடுப்பில் சொருகி இருப்பார்.  இப்பொழுது  எங்கள் ஊரில் அப்படியான துப்பட்டா உடுத்தும் முறை மறைந்து விட்டது. ஒன்று இரண்டு வயதானவர்களை தவிர  யாரும் உடுத்துவது இல்லை. எங்கள் தெருவின் முடிவில் ஆரம்பிக்கும் முடுக்கில் கொஞ்சம் தொலைவு நடந்தால் அவருடைய வீடு வரும். மிகவும் அமைதியான ஒரு பகுதி. அந்த பக்கம் தான் என் மச்சான் வீடும், அதைச் சாகாகவைத்து அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். பெரிய தாஜ்மஹால் ஒன்றும் இல்லை தான். ஆனால். ஆதில் ரசிக்கக் கூடிய அம்சங்கள் நிறையவே இருந்தன. அவருடைய குடுசையை சுற்றி பன ஓலையால்  வேலி கட்டி இருக்கும் அதன் கதவும் பன ஓலையால் கட்டப்பட்டது தான். கதவை மெல்ல நகர்த்தி உள்ளே சென்றால் கடக்கரை குருத்து மணல்  பரப்பிய முற்றும். அதன் முடிவில் சிறிது உயர்த்தி கட்டப்பட்ட மண் திண்ணை. ஆதில் பல போதல்கள் இருக்கும். ஒன்றில் எனக்கு மிகவும் பிடித்த தேன் மிட்டாய் இருக்கு. சில நேரங்களில் என்னிடம் காசு வாங்காமலே எனக்கு தேன் மிட்டாய் தருவார். ஆனால் அவர் வீட்டுக்கு பெரும்பாலும் ஊறுகாய் வாங்கத்தான் எல்லோரும் வருவார்கள். அது இப்போது கடையில்  விற்கும் ஊறுகாயை போன்று இருக்காது. அதன் சுவையை வார்த்தையால்  சொல்லமுடியாது.                   
                                           அவருக்கு நிகராக எங்கள் ஊரில்  ஊறுகாய் போடுவதற்கு இன்னொரு பாட்டியால்  தான் முடியும். அவர் பெயர் கண்ணாடிக்காதுன் மா.  அவரும் என் மேல் பாசம்மாணவர்தான்  ஆனால் அவருடைய தோற்றம் கோவக்காறரை போன்று இருக்கும். அதனால் அவர் விட்டுக்கு செல்லுவதை தவிர்த்தேன். என் அம்மா கண்ணாடிக்காதுன் மா விடம் உருகாய் வாங்கிவா என்று சொன்னாலும் நான் கொம்புதொப்பி மாவிடம்  சென்றுதான் வாங்கி வருவேன். என் அம்மாவிற்கு ஏனோ கொம்புதொப்பி மாவை பிடிக்காது. அவரை காணும் போது எல்லாம் வெடுக்கு வெடுக்கு என்று பேசிவிடுவார். ஆனாலும் என் அம்மாவிற்கு தெரியாமல் என்னை கொஞ்சிவிட்டு செல்வார்.
                                   இன்று அலுவலகத்தில் வேலை பளு அதிகம். அறைக்கு வந்து உட்காரவே முடியவில்லை  நோன்பு வேறு வைத்து இருந்தேன். வெங்கடேஷ்  கைபேசியில் அழைத்து  எனக்கு உடம்புக் முடியவில்லை உடனே மருத்துவமைக்கு அழைத்து போ என்று கதறினான். உடனே கோரமங்கலவிர்க்கு செல்லவேண்டும் என்றால்  ஹெலிகாப்டரில் தான் செல்ல முடியும் . அவ்டர் ரிங் ரோடு டிராபிக்கில் பிதிங்கி வழியும். ஹெலிகாப்டரில் செல்லும் அளவிற்கு எல்லாம் வசதி கிடையாது. அவன் செய்த புண்ணியம் சுந்தர்  பைக்கில் என்னைக் காணவந்தான் அவனை அழைத்துக் கொண்டு அவனுக்கு தெரிந்த அனைத்து குறுக்கு சாலை வழியாக சென்று வெங்கடேஷ் அறையை அடைந்தேம். வெங்கடேஷை  ஆட்டோவில் உட்காரவைத்து மருத்துவமைக்கு அழைத்துச் சென்றோம். நோன்பு திறக்கும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் பரிசோதித்து  அட்மிட் செய்ய சொல்லிவிட்டார். என் அசதி எல்லை மீறிச் சென்றுகொண்டிருந்தது. அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவனை அட்மிட் செய்து.  நர்ஸ் அவனுக்கு ட்ரிப்ஸ்சுக்குள்ள நீடில்லை மாட்டிக் கொண்டிருதார்.  வெங்கடேஷ்  சரியான குசும்பு பிடிதாவன். அவன் குசும்பை காட்ட இதுவா நேரம். மேடம் நீங்க தமிழ்நாடா ? நர்ஸ் சரியான கோவகாரவங்க போல நான் எந்த ஊற இருத்த உங்களுக்கு  என்ன என்று கொஞ்சம் அதட்டலாக சொல்லிவிட்டு சென்று விட்டார். வொனக்கு வேனும். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. சுந்தரை அங்கே உட்கார சொல்லிவிட்டு அருகில் உள்ள கேண்டினில் சென்று மைசூர் போண்டா இரண்டு தின்றேன்.  கொஞ்சம் உடலுக்கு தெம்பு கிடைத்தது. எனக்கு  பெங்களுரு ஹோட்டல் சாப்பாடு அறவே பிடிக்காது. எல்லாவற்றிலும் எதோ ஒரு இனிப்பை சேர்கிறார்கள். வாயில்வைத்தால் குடலை பிரட்டி கொண்டுவரும். என் அம்மா நன்றாகவே சமைப்பார். அவர் வைக்கும் மீன் ஆனமும் வாழைக்காய் ஆனமும் எனக்கு நிரம்ப பிடிக்கும். ஆனால் வேண்டும் என்றே அவர் சாப்பாட்டை குறை சொல்லுவேன். இப்போது அனுபவிக்கிறேன் . இரண்டு பாட்டில் குல்கோஸ் ஏறிய பிறகு ஓர் அளவுக்கு தெளிந்துவிட்டன.   இஷா தொழுகைக்கு  நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தொழுதுவிட்டு  அமர்ந்து இருதேன்.  ஹிந்தியில் யாரோ எதோ சொல்லுவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன். நர்ஸ் நின்று கொண்டிருதார். மெதுவாக எழுத்து எனக்கு ஹிந்தி தெரியாது என்றே. மிகுந்தே ஆச்சர்யத்துடன்
you are a muslim right ?
yes.
you dont know urudu or hindi ?
sorry, No.
then what language you know ?
tamil and little bit english.
ஓஓ  தமிழா
ஆமம்.
உங்களுக்கு உருது தெரியாத
தெரியாது....
தமிழக கேரளா முஸ்லிம்களின் வரலாறு வேறு  , மற்ற மாநில முஸ்லிம்களின் வரலாறு வேறு. முஹம்மது நபி இஸ்லாத்தை
ப் பற்றி பிரச்சாரம் செய்வதற்கு முன்னாலே. தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் அரபிகள் வணிகம் செய்யவந்து விட்டார்கள். அவர்களை எவனர்கள், சோனர்கள் என்று சங்க இல்லகியம் அழைக்கிறது. முஹம்மது நபி இஸ்லாத்தை பற்றி பேசும்போது இங்கும் அதன் தாக்கம் உணரப்பட்டது. அப்பொழுதே இஸ்லாம் இங்கு வந்துவிட்டது. இஸ்லாத்தை பின்பற்ற தேவையான நூல்கள் எல்லாம் தமிழிலேயே கிடைகிறது. என்ன ரொம்ப பிளேடு  போடுறேனா இல்லை கொஞ்சம். சாரி,  ஒரு  சின்ன தவி
என்ன சொல்லுகோ. நான் நாளைக்கு 6 மணிக்கு ஆபீஸ்ல இருக்கனும் அலாரம் வைத்தால் பேசண்டுக்குக் தொந்தரவ இருக்கும். நீங்க ட்ரிப்ஸ் செக் பன்ன வரும் போது. நாலு மணிக்கு எழுப்பி விடமுடியுமா. காண்டிப்பா மிக்க நன்றி. பெங்களுருவின் அதிகாலை  மனதிற்கு மிகவும் கொண்டாட்டத்தை கொடுக்க கூடியவை . அதுவும் கோரமங்களா 5 வது பிளாக் என்னால் மறக்கவே முடியாது. சாலையின் இருபுறம் மரங்களின் சிவப்பு நிற பூ
க்கள் உதிர்ந்து
சாலையே வண்ணமயமாக  இருக்கும். குழந்தைக்கான தேடல் மிகுந்த பார்வையுடன் ஒவ்வொரு  காட்சியையும் மனதில் ஆழமாக பதியவைத்து
க் கொள்வேன். ஆனால் இப்படியான தருங்களிலும் என் குழந்தை பருவ நினைவுகள் மேலிட்டு  எந்த பிரங்கையும் இல்லாமல் அந்த நீண்ட சாலையையும் கடந்து இருக்கிறேன். பல நேரம் இது அதிர்ச்சியா இருக்கும், ஏன் இப்படி நான் குழந்தை பருவ நினைவுக்கு அடிமையாய்  இருக்கிறேன் என்று. அலுவலகத்தில் என் இருக்கை  இரண்டாவது தலத்தில் இருந்தது எப்பொழுதும் நான் படியையே தேர்ந்தெடுப்பேன் ஏன்னா பிட்நெஸ் மெய்ன்டைன் பண்ணணும்ல. காபி வெண்டிங் மெசின்ல குவளை வழிய வழியக் காபி எடுத்துக் கொண்டு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள பால்கனியில் மறுபடியும் அந்த இனிமையான காலையோடு முழுமையாக கலந்தேன்.

Sunday, March 7, 2010

ஏன் இப்படி நடக்கிறது நண்பனே

நண்பனே
உலகின் ஆட்சியாளர்களுக்கு
அதி விருப்பமான பானம்
எது தெரியும்மா ?
மக்களின் குருதி.
நண்பனே
கண்டங்களை இணைப்பது
அட்சரேகையோ  தீர்கரேகையோ  இல்லை
வரலாற்றுப் பக்கங்களில் பிரிட்டுக்
கொண்டுவரும் கண்ணீரும் குருதியும்.
அமெரிக்கா
ஜய்ரோபியா     
ஆஸ்ட்ரேலியா 
ஆப்ரிக்கா
அரேபியா
ஆசியா
எல்லாவற்றுக்கும்  பொதுவான
பாடல் துப்பாக்கி வெடி சத்தம்மாகவே இருக்கிறது  .
வொவ்வொரு நாளும் குழந்தைகள்
அனாதைகலாகாமல் விடிவதில்லை.
அவர்களுக்காக கண்ணீர் விடுகிறேன்
அது அவர்களுக்கு எப்பொழும் பயன்
அளிகப்போவதிலை.
என் கனவில் அவர்களின் தலை முடியை
கோதிவிடுகிறேன்.
அவர்களின் நெற்றியில் முத்தம் இடுகிறேன்
மரங்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு
அவர்களுடன்  விளையாடுகிறேன்.
அவர்களுக்கு கதை சொல்லுகிறேன்
அவர்களின் விரல் பிடித்து நடை பழகுகிறேன்.
இவை எப்பொழுதும் அவர்களுக்கு
பயன் அளிகப்போவதிலை.

Wednesday, March 3, 2010

சில குறிப்புக்கள்

தனித்து விடப்பட்ட ஆன்மாவே
உனக்கு நண்பர்கள் இல்லையா ?
நான்   ஒரு நாடோடி என் ஆன்மாவை
யாரும் நெருங்கும் பொழுதில்
இறக்கம் இல்லாமல் வேறு உலகுக்கு
 புலம் பெயர்கப்பட்டிருப்பேன்  .
நான்  யாரையும் நெருங்கும் பொழுதில்
அவர்கள் வேறு உலகுக்கு
புலம் பெயர்கப்பட்டிருப்பார்கள்.
என்னை சுற்றி இப்பொழுது பல ஆன்மாகள்
இருக்கின்றன.
வெற்று இரைச்சல்கள் அவைகளிடம் இருந்து
தப்பிக்கவே விரும்புகிறேன்.
நன்பன் என்னும் வெற்றிடத்தை தனிமை
ஆழ்ந்த மௌனத்தின் முலமாக நிரப்புகிறேன்.

Thursday, February 25, 2010

சிட்டுக்குருவி

அந்தச் சிட்டுக்குருவியை
மிகவும் நேசித்தேன்
அதன் மெல்லிய இறகுகளை
அதன் சிறிய சொன்டை,
அதன் மென்மையான
கிரிச்  கிரிச் ஓசையை , 
குறுக்கும் நெடுக்கும்மாக
தத்தி செல்லும் அழகை.
கவட்டைபுல்லுக்கு இரையாகி
அதன் கண்கள் ஆழ்ந்த அமைதிக்கு
சென்றுகொண்டிருந்த போது ,
மென் பஞ்சு பொதி போன்ற அதன்
உடலின் துடிப்புகள் எனக்குள் ஒரு
செய்தியை பரப்பியது.
இந்த நூற்றாண்டின் கடைசி
குருவியின் கடைசி நாழிகையை
உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது.

Thursday, February 11, 2010

21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே

21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
உனது வேர்களை கண்டடைய
முயலாதே.
உனது கலாச்சார  அடையாளங்களை
மறுபதிப்பு செய்யமுயலாதே. .
உனது உடுப்பை கண்டு மிரளுபவர்களை
பார்த்தாயா.
அது காட்டுமிராண்டிகளின் அடையாளம்
என்று முத்திரை குத்தப்பட்டு
வெகு நாட்களாகி விட்டது.
உனது ஞானமரபுகளை நினைவு
அடுக்கின் ஆழப்புதைத்து விடு.
அதை ஒருபோதும் உன் குழந்தைகளுக்கு
கற்பிக்காதே.
அவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின்
செத்த சொற்களைச் சொல்லிக்கொடு.
போலிப் பாசாங்குகளை அள்ளிப்பூசி விடு.
இரட்டை வாழ்கை வாழ்பவனே
அந்த கொடுரத்தை உனது சந்ததிகளுக்கு
ஒருபோதும் பரிசளித்து விடாதே.
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
எதற்காக கண்ணிர் விடுகிறாய்
உன்னுடைய கடைசி பூவரச மரம்
சாகத்தான் போகிறது.
இனி அதை ஒருபோதும் உலகில்
காணவே முடியது.
அதற்கு மாற்றாக பேப்பர் ரோசுகளை
வளர்த்துக்கொள்.

Monday, February 1, 2010

அவன் இன்று இல்லை

அவனை எப்பொழுதாவது  கண்டிருக்கிறீர்களா ?
அவனுடைய துயரம் பற்றி அவனிடம் ஏதும் 
கேட்டிருக்கிறீர்களா?
அவனுடன்  ஒரு கோப்பை தேனீராவது
அருந்தி இருக்கிறீர்களா ?
அவ்வாறு செய்து இருந்தால்
அவன் இன்று இருந்திருப்பான்  .

நண்பனே

நண்பனே ! 
உன்னை முடக்கிப் போட்ட ஒன்றுதான்
என்னையும் முடக்கிப் போட்டது.
ஆனால் உன்னைப்போல் வருத்தப்பட்டு
பிறரிடம் சடவு சொல்லித் திரியவில்லை .
அது கொடிய விசத்துடன் என்னைத் தீண்டிய
போதெல்லாம்.
என்னைச் சூழச் சிந்தி விழுந்த பானத்தின்
அதீதத் துளி ஒன்று  என் நாவில் பட்டு
எனக்கான உயிர்ப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது.

சிதறுவதும் சிதைவதும்

வெடித்துச் சிதறினோம்
அணு அணுவாய்ச் சிதைந்து போனோம் 
தோல்களைக் காகிதமாக்கி
எலும்புகளைப் பேனாவாக்கி
 குருதியை மையாக்கி
எங்களுடைய கண்ணீரை
சொற்களாக மாற்றினோம்.
உலகம் எங்கும் வியாபித்திருக்கும்
நிறங்கள் எங்கள் சொற்களை
மறைத்தது.
சிதறுவதும் சிதைவதும் அத்துணை
இனிமையான காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்னும் எத்தனை ஒளியாண்டுகளுக்கு
தொடருமோ.

Thursday, January 28, 2010

மிருகம்

ஆழ்மனதில் அலைந்து கொண்டிருந்த
மிருகத்தை பிடித்து.
சிந்தை என்னும் சிறையில் அடைத்து
ஞானம் என்னும் ஆற்றில் குளிக்க வைத்து
வெளி உலகுக்கு அழைத்து வந்தேன்.
என்ன வேடிக்கை  !
ஞானம் பெற்ற மிருகமாக
வெளிப்பட்டது.

Monday, January 11, 2010

1989-2010



ஷேய்க் அபூபக்கர் ஒளியுள்ள கந்தூரில்
பிள்ளைய காணாகிவிட்டு வந்துருக்க.
அலைவாய்க்கரை முச்சூடும் தேடிட்டோம்.
பிள்ளையை காணோம்.......
அழுகையை நிறுத்து
உங்கம்மா பேரு என்னா ?
உங்கப்பா பேரு என்னா ?
நா௬ரம்மா அவன் தெக்குதெரு
பிள்ளை டி .
உங்க வப்பா பேரு என்னா ?
உங்க உம்மா பேரு என்னா ?
அழாதே தம்பி.
நான் பிள்ளையை தெக்கு தெருவுல
விட்டுட்டு வாரேன்.
நா௬ரம்மா தோளில் அமர்ந்து உலகை பார்த்துகொண்டு
சென்றான்.........
இப்பொழுதும் தொலைந்து விட்டான்
இப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான்

Wednesday, January 6, 2010

இருள்கள்


இருள்கள் மண்டிய தரை தெரியாத பாதாளத்தில்
விழுந்து கொண்டிருக்கும் உயிரின்
கதறல் கேட்கிறது .
ஏந்தும் கரங்கள் எங்கே
ஒரு காற்றை போல்
வருமோ.
ஒரு மின்னலை போல்
வருமோ
அல்லது
கானல் ஆகுமோ.