வெடித்துச் சிதறினோம்
அணு அணுவாய்ச் சிதைந்து போனோம்
தோல்களைக் காகிதமாக்கி
எலும்புகளைப் பேனாவாக்கி
குருதியை மையாக்கி
எங்களுடைய கண்ணீரை
சொற்களாக மாற்றினோம்.
உலகம் எங்கும் வியாபித்திருக்கும்
நிறங்கள் எங்கள் சொற்களை
மறைத்தது.
சிதறுவதும் சிதைவதும் அத்துணை
இனிமையான காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்னும் எத்தனை ஒளியாண்டுகளுக்கு
தொடருமோ.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment