Monday, January 11, 2010

1989-2010



ஷேய்க் அபூபக்கர் ஒளியுள்ள கந்தூரில்
பிள்ளைய காணாகிவிட்டு வந்துருக்க.
அலைவாய்க்கரை முச்சூடும் தேடிட்டோம்.
பிள்ளையை காணோம்.......
அழுகையை நிறுத்து
உங்கம்மா பேரு என்னா ?
உங்கப்பா பேரு என்னா ?
நா௬ரம்மா அவன் தெக்குதெரு
பிள்ளை டி .
உங்க வப்பா பேரு என்னா ?
உங்க உம்மா பேரு என்னா ?
அழாதே தம்பி.
நான் பிள்ளையை தெக்கு தெருவுல
விட்டுட்டு வாரேன்.
நா௬ரம்மா தோளில் அமர்ந்து உலகை பார்த்துகொண்டு
சென்றான்.........
இப்பொழுதும் தொலைந்து விட்டான்
இப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறான்

No comments: