I.
அவனை கீறியும் குதறியும் பாசத்தோடும்
கோபத்தோடும் விளையாடும் இந்த
பூனைகளிடம் இருந்து தப்பித்து
சூரியனுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறான்
சந்திரனுக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறான்
மூச்சிரைக்க ஓடி
கால்கள் இடரி மேலும், கீழும் விழுந்து
மேல் அதிக காயங்களுடன்
அவனுக்கு தெரிந்த விண் மீண்களுக்கு
பின்னாலும் ஒலிந்து பார்த்துவிட்டான்
எந்த பாயனும் இல்லை.
அவைகளின் கண்ணில் பட்டுவிடுகிறான்
II.
அவனுக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
ஓடி ஒளியும் இந்த விளையாட்டு பிடிக்கவில்லை
அவன் ஓடி ஒளியும் இடம் எல்லாம் அவைகள் எதிர் படுகிறது
அவன் ஓடி ஒளியும் இடம் எல்லாம் அவைகள் எதிர் படுகிறது
மழை பொழிய மறுக்கும் மேகம் போல் கடந்து செல்கிறார்கள்
மௌன மேகங்களுக்கு இடையில் மின்னலைப் போல
அதி தீவிரத்துடன்.
அதன் பொருள் என்ன ?
அவனக்கு தெரிந்த உணர்சிகளின் களைகளஞ்சியத்தின்
ஒவ்வொரு குறிப்பையும் பிறட்டிப் பார்த்துவிட்டான்.
III.
குறுக்கும் நெடுக்குமாக துள்ளி துள்ளி செல்வதும்
புருவங்களை உயர்த்தி உயர்த்தி பார்ப்பதும்மாக
ஆரஞ்சு நிற பூனையின் குறும்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அந்தி வானில் தோன்றி மறையும் வானவில் போல்
பார்வையால் சீண்டி விட்டு மறையும்
ஆரஞ்சு நிற பூனையின் குறும்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
மியாவ் மியாவ் ஓசை எழுப்பி
உரகத்தை களைத்து
கனவாய் மறையும்
ஆரஞ்சு நிற பூனையின் குறும்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
வான் முகில்
மழை கற்று
நிலம் நீர்
மழை கற்று
நிலம் நீர்
உணர்ச்சியால் உந்தப்பட்டு
சட்டென்று திரும்பிப்பார்த்தான்
அதன் இடத்தை
ஓ ஆரஞ்சி!!!!
சட்டென்று திரும்பிப்பார்த்தான்
அதன் இடத்தை
ஓ ஆரஞ்சி!!!!