அந்தச் சிட்டுக்குருவியை
மிகவும் நேசித்தேன்
அதன் மெல்லிய இறகுகளை
அதன் சிறிய சொன்டை,
அதன் மென்மையான
கிரிச் கிரிச் ஓசையை ,
குறுக்கும் நெடுக்கும்மாக
தத்தி செல்லும் அழகை.
கவட்டைபுல்லுக்கு இரையாகி
அதன் கண்கள் ஆழ்ந்த அமைதிக்கு
சென்றுகொண்டிருந்த போது ,
மென் பஞ்சு பொதி போன்ற அதன்
உடலின் துடிப்புகள் எனக்குள் ஒரு
செய்தியை பரப்பியது.
இந்த நூற்றாண்டின் கடைசி
குருவியின் கடைசி நாழிகையை
உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது.
Thursday, February 25, 2010
Thursday, February 11, 2010
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
உனது வேர்களை கண்டடைய
முயலாதே.
உனது கலாச்சார அடையாளங்களை
மறுபதிப்பு செய்யமுயலாதே. .
உனது உடுப்பை கண்டு மிரளுபவர்களை
பார்த்தாயா.
அது காட்டுமிராண்டிகளின் அடையாளம்
என்று முத்திரை குத்தப்பட்டு
வெகு நாட்களாகி விட்டது.
உனது ஞானமரபுகளை நினைவு
அடுக்கின் ஆழப்புதைத்து விடு.
அதை ஒருபோதும் உன் குழந்தைகளுக்கு
கற்பிக்காதே.
அவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின்
செத்த சொற்களைச் சொல்லிக்கொடு.
போலிப் பாசாங்குகளை அள்ளிப்பூசி விடு.
இரட்டை வாழ்கை வாழ்பவனே
அந்த கொடுரத்தை உனது சந்ததிகளுக்கு
ஒருபோதும் பரிசளித்து விடாதே.
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
எதற்காக கண்ணிர் விடுகிறாய்
உன்னுடைய கடைசி பூவரச மரம்
சாகத்தான் போகிறது.
இனி அதை ஒருபோதும் உலகில்
காணவே முடியது.
அதற்கு மாற்றாக பேப்பர் ரோசுகளை
வளர்த்துக்கொள்.
உனது வேர்களை கண்டடைய
முயலாதே.
உனது கலாச்சார அடையாளங்களை
மறுபதிப்பு செய்யமுயலாதே. .
உனது உடுப்பை கண்டு மிரளுபவர்களை
பார்த்தாயா.
அது காட்டுமிராண்டிகளின் அடையாளம்
என்று முத்திரை குத்தப்பட்டு
வெகு நாட்களாகி விட்டது.
உனது ஞானமரபுகளை நினைவு
அடுக்கின் ஆழப்புதைத்து விடு.
அதை ஒருபோதும் உன் குழந்தைகளுக்கு
கற்பிக்காதே.
அவர்களுக்கு 21 ஆம் நூற்றாண்டின்
செத்த சொற்களைச் சொல்லிக்கொடு.
போலிப் பாசாங்குகளை அள்ளிப்பூசி விடு.
இரட்டை வாழ்கை வாழ்பவனே
அந்த கொடுரத்தை உனது சந்ததிகளுக்கு
ஒருபோதும் பரிசளித்து விடாதே.
21 ஆம் நூற்றாண்டின் நாடோடியே
எதற்காக கண்ணிர் விடுகிறாய்
உன்னுடைய கடைசி பூவரச மரம்
சாகத்தான் போகிறது.
இனி அதை ஒருபோதும் உலகில்
காணவே முடியது.
அதற்கு மாற்றாக பேப்பர் ரோசுகளை
வளர்த்துக்கொள்.
Monday, February 1, 2010
அவன் இன்று இல்லை
அவனை எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா ?
அவனுடைய துயரம் பற்றி அவனிடம் ஏதும்
கேட்டிருக்கிறீர்களா?
அவனுடன் ஒரு கோப்பை தேனீராவது அவனுடைய துயரம் பற்றி அவனிடம் ஏதும்
கேட்டிருக்கிறீர்களா?
அருந்தி இருக்கிறீர்களா ?
அவ்வாறு செய்து இருந்தால்
அவன் இன்று இருந்திருப்பான் .
நண்பனே
நண்பனே !
உன்னை முடக்கிப் போட்ட ஒன்றுதான்
என்னையும் முடக்கிப் போட்டது.
ஆனால் உன்னைப்போல் வருத்தப்பட்டு
பிறரிடம் சடவு சொல்லித் திரியவில்லை .
அது கொடிய விசத்துடன் என்னைத் தீண்டிய
போதெல்லாம்.
என்னைச் சூழச் சிந்தி விழுந்த பானத்தின்
அதீதத் துளி ஒன்று என் நாவில் பட்டு
எனக்கான உயிர்ப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது.
உன்னை முடக்கிப் போட்ட ஒன்றுதான்
என்னையும் முடக்கிப் போட்டது.
ஆனால் உன்னைப்போல் வருத்தப்பட்டு
பிறரிடம் சடவு சொல்லித் திரியவில்லை .
அது கொடிய விசத்துடன் என்னைத் தீண்டிய
போதெல்லாம்.
என்னைச் சூழச் சிந்தி விழுந்த பானத்தின்
அதீதத் துளி ஒன்று என் நாவில் பட்டு
எனக்கான உயிர்ப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது.
சிதறுவதும் சிதைவதும்
வெடித்துச் சிதறினோம்
அணு அணுவாய்ச் சிதைந்து போனோம்
தோல்களைக் காகிதமாக்கி
எலும்புகளைப் பேனாவாக்கி
குருதியை மையாக்கி
எங்களுடைய கண்ணீரை
சொற்களாக மாற்றினோம்.
உலகம் எங்கும் வியாபித்திருக்கும்
நிறங்கள் எங்கள் சொற்களை
மறைத்தது.
சிதறுவதும் சிதைவதும் அத்துணை
இனிமையான காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்னும் எத்தனை ஒளியாண்டுகளுக்கு
தொடருமோ.
அணு அணுவாய்ச் சிதைந்து போனோம்
தோல்களைக் காகிதமாக்கி
எலும்புகளைப் பேனாவாக்கி
குருதியை மையாக்கி
எங்களுடைய கண்ணீரை
சொற்களாக மாற்றினோம்.
உலகம் எங்கும் வியாபித்திருக்கும்
நிறங்கள் எங்கள் சொற்களை
மறைத்தது.
சிதறுவதும் சிதைவதும் அத்துணை
இனிமையான காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இன்னும் எத்தனை ஒளியாண்டுகளுக்கு
தொடருமோ.
Subscribe to:
Comments (Atom)