
என் இடத்தை யாராவது
எடுத்துக் கொள்ளுகள்.
பல முறை தப்பிக்க முயன்றும்
மடக்கி நிறுத்தப்பட்ட இடத்தை.
போரின் வேதனையை
காணச் சகியாமல்
கண்களை இறுக மூடிக்கொண்டு
போரின் ஓலங்களை
கேட்கச் சகியாமல்
காதுகளை இறுக மூடிக்கொண்டு
நிற்கும் இந்த இடத்தை
யாரவது எடுத்து கொள்ளுகள்.
No comments:
Post a Comment