
தெருவில் விளையாட செல்லும்போது
உச்சிப்படை முனி வரும் வெளியே போகாதே என்பாய்.
சாயங்காலம் வெளியே சென்றால்
கூதக்காது அடிக்குது வெளியே போகாதே என்பாய்.
கடல்கரைக்குப் போகாதே பிள்ளை பிடிக்கிறவன்
பிடிச்சுகுவான் என்பாய் .
கணக்கு போடலைனா நீ என் பிள்ளையே
இல்லை என்பாய் .
பால்கார ஆத்தாவிடம் உன்னை தவிட்டுக்கு
தான் வாங்கினோம் என்பாய்.
அவமானம் தாங்காமல் சுருண்டு வீழ்ந்தேன் .
சிறுவயதில் நீ முறித்துப்போட்ட தன்னம்பிக்கை என்னும்
முதுகெலும்பை இப்போது சரிசெய்ய சொல்லுகிறாயே.
1 comment:
அருமை அருமை!!
\\சிறுவயதில் நீ முறித்துப்போட்ட தன்னம்பிக்கை என்னும்
முதுகெலும்பை இப்போது சரிசெய்ய சொல்லுகிறாயே.\\
நல்லாயிருக்கு இந்த வரிகள்!
Post a Comment