
என்னை சிதைத்து சிதைத்து,
என்னை உடைத்து உடைத்து,
இந்த மனிதர்கள் கேட்கும்
நல்லவனை தேடினேன்.
எனக்குள் அப்படி ஒரு நல்லவன்
இல்லை இல்லவே இல்லை.
உடல் எங்கும் ரணமாகி
குருதி வழிகிறது.
என்னை தீண்டும் தென்றல் கூட
வேதனையாகிவிட்டது.
இப்பொழுது
என்னால் சிறு குழந்தையின்
சிரிப்பையும் ரசிக்க முடியவில்லை
என்னால் நிலவோடும்
பேசமுடியவில்லை.
No comments:
Post a Comment