Saturday, April 18, 2009

கத கதப்பு



அன்பு என்னும் பனித் துளியில் நனைகையில்
பகலவன் பட்டு கானலாய் ஆனது.
கசங்கி விழுந்தேன் .
பால் நிலவின் பிரவாகம் என்னை
அனைத்து.
அதன் கத கதப்பில் இருக்கையில்
ஏன் வந்தது இந்த அம்மாவாசை .

Thursday, April 9, 2009

அந்த பொருள்



பெரிய மதில்களை கடந்து செல்கிறேன்.
ரோஜா தோட்டங்களை கடந்து செல்கிறேன்.
அதன் மணங்களை நுகருகிறேன்.
முழுமதியும் என்னை கடந்து செல்கிறாள் .
கோப்பைகளை வெறுமையாக்கிவிட்டு நண்பர்கள் கலைகிறார்கள்.
எந்த அழகிலும்,
எந்த நறுமனத்திலும் ,
எந்த சொல்லிலும்,
மனம் தேறவில்லை .
கூட்டத்திலும் தனிமையிலும்
மனதை தேற்றும் பொருளை தேடி மனம் அலைகிறது.
ஆனால் அந்த பொருள் என்னை கடந்து செல்லவே இல்லை.....