
பாலைக் காற்றே என் கதை கேளாயோ ?
நட்சத்திரங்களின் வீதியில்
நிலவைத் தேடி அலைகையில்.
கை தொடும் தொலைவில் நிலவை கண்டேன்.
திடீரென யாரோ மேகப் படுதவால் நிலவை மூடி,
என்னை பாலைவனத்தின் புதை குழியில் தள்ளினர் .
என் கால்கள் புதை குழிக்குள் சென்று கொண்டிருக்கிறது .
என் கைகள் நிலவை நோக்கி அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
என் மூச்சி காற்று தீர்ந்து கொண்டிருக்கிறது.
இறைவனின் மீதான நன்பிக்கை வழர்ந்து கொண்டிருக்கிறது .