Tuesday, January 6, 2009

தனிமையே



நீ பாலைவனத்தில் பிறந்தவளோ ?
கள்ளி பால் அருந்தி வளர்ந்தவளோ ?
ஏன் இவ்வாறு என்னை குத்துகிறாய் .

நீ ஆழியின் நடுவே பிறந்தவளோ ?
அலை ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு இம்சிக்கிறாய்,

நீ சிறைச்சாலையில் பிறந்தவளோ ?
காவலர் அடி ஓசை கேட்டு வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு துவைத்து எடுக்கிறாய்.

நீ பலரின் துன்பக்கண்ணிரை குடித்து வளர்ந்தவளோ ?
அவர்களின் செந்நீரில் குளித்து வளர்ந்தவளோ ?
ஏன் என்னை இவ்வாறு பிழிகிறாய்

நீ கொடுத்த வலிகளெல்லாம் என் மனதை
தகர்க்கும் ஏவுகணை என்றா நினைக்கிறாய் ?

பொறுமையின் குன்றில் ஏறி காத்திருப்பேன்

ஒரு நாள் இந்த பாலைவனத்திலும் மனித
நிழல் விழும்

ஒரு நாள் இந்த ஆழியிலும் கப்பல்
செல்லும்

No comments: