Wednesday, December 24, 2008

ஏன் இந்த சிறுவன் அழுகிறான்


அதி காலை சரியாக 6 மணி. மென்மையான குளிர் கற்று வீசிக்கொண்டிருந்தது வாப்பா டே பள்ளிக்கு( மத்றசா) நேரம் ஆச்சு எழும்புடா என்று ஒரு தாய் தன் 4 ஆம் வகுப்பு படிக்கும் மகனை எழுப்பி கொண்டிருந்தார். மிகுந்த சோம்பலுடன் கூடவே இரண்டு திட்டுகளையும் வாங்கிகொண்டு ,தன் தாயின் உதவியுடன் காலை கடமைகளை எல்லாம் முடித்து விட்டு, அடுபாங்கரையில் இருத்த தேத்தண்ணியை ( டி ) குடித்து விட்டு, மெதுவாக தர்ஹாவில் உள்ள பள்ளியை நோக்கி நடையை கட்டினான். ஹஜரத் கண்ணில் படாமல் பதுங்கி போய் மறைவாக அமர்ந்தான். ஒவ்வொருவராக சென்று ஹஜரத்திடம் பாடம் கொடுத்தனர். அந்த சிறுவனின் முறை வந்தது. இன்றைக்கு சரியா பாடம் சொல்லலைனா பிச்சுருவேன் பிச்சி என்று ஒரு அதட்டல். அதிலேயே அந்த சிறுவன் பார்த்துவைத்த பாடம் எல்லாம் மறந்து போனது. பேந்த பேந்த முழித்தான் வழக்கம் போல அடியை வாங்கிகொண்டு அழுதுகொண்டே விட்டுக்கு திரும்பினான்.
அம்மா அவித்துவைத்த இடியாப்பத்தை அரக பரக ஊட்டினர் , முயலுக்கு சாப்பாடு போட்டாச்சா என்று இடை இடையே கேட்டுக் கொண்டிருந்தான் அந்த சிறுவன். அதை எல்லாம் நாங்க பார்த்துக்குற்றோம் நீ ஒழுங்கா பள்ளிகூடத்துக்குப் போ என்று ஒரு அதட்டல். முஞ்சியை உர் என்று வைத்துகொண்டு வழியில் செல்லும் ஆட்டுகுட்டிகளுடன் விளையாடிக்கொண்டு பள்ளிநோக்கி நடந்தான். அன்று திங்கள் கிழமை பள்ளியில் அச்செம்ப்லி நடப்பதற்கான ஆயத்தம் நடத்து கொண்டிருந்தது. தலைமை ஆசிரியை வந்து பள்ளியின் அருமை பெருமைகளை பற்றி பேருரை ஆற்றினர். சிறுவனுக்கோ கால்வலி எடுத்துவிட்டது வெயில் வேறு கொளுத்துகிறது. பேருரையோ நீண்டுகொண்டே சென்றது.அந்த துன்பத்திலும் ஒரு இன்பம். முதல் பீரியட் கணிதம் அது கட் ஆகிவிடும். ஆனால் பாவம் அந்த சிறுவன் போட்ட கணக்கு பலிக்கவில்லை.
இரண்டாவது பீரியட் வர‌ வேண்டிய மிஸ் விடுப்பில் சென்றுவிட்டார்கள். அந்த வகுப்புக்கு வந்த கணித மிஸ் ஃப்ரைடே  கொடுத்த  ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சாச்சா என்று கேட்டார். எல்லோரும் ஹோம் வொர்க் நோட்டுகளை கொண்டு போய் மிஸ் மேஜை மீது  வைத்து விட்டு வந்தார்கள். சிறுவனின் நோட்டை திருத்துவதற்கு திருப்பினார் அதில் ஒன்றுமே இல்லை. வழக்கம் போல ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வைத்து கொண்டு நின்றான். இங்க வாட கிட்ட என்று அழைத்து கூரிய நகத்தால் வயிற்றையும் காதையும் நன்றாக கிள்ளினார். எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு தன்னுடைய இருப்பிடம் நோக்கி வந்தான். ஏண்டா ஹோம் வொர்க் செய்யலைனு ஆதரவாக நண்பன் கேட்டான். ஹோம் வொர்க் இருக்குன் அம்மா ட சொன்ன அம்மா அடிச்சு அடிச்சு சொல்லிதருவாங்க அதான் செய்யலை மறந்து போய் டயரியையும் ஸ்கூல் விட்டுட்டு போய்டேன்.
தகவல் நண்பர்கள் மற்றும் இன்ன பிற வழிகள் மூலமாக விட்டுக்கு சென்றது. இவனை இப்படியே விட்டால் சரி வராது உடனே இவனை டியூஷன்ல சேர்த்தாதான் சரியா வருவான் என்று சொல்லி, பக்கத்தில் உள்ள அந்த சிறுவனின் உறவினர் நடத்தும் டுஷனில் கொண்டு போய் சேர்த்தார்கள். உங்கவாப்பா எவ்வளவு படிச்சவங்க. நீ ஏண்டா படிக்க மாட்டேங்குறே என்று சொல்லி அந்த டீச்சரும் தலை வாரும் சீப்பால் அடிப்பார்கள். அவ்வப் போது புள்ளைய அடிக்காமல் சொல்லிக்கொடு டி என்று ஒரு குரல். அந்த டியூஷன் டீச்சரின் அம்மா. அப்போது மட்டும் கொஞ்சம் அடியில் இருத்தும் விடுதலை கிடைக்கும் .இதற்கு எல்லாம் இடையில் அந்த சிறுவனின் உள்ளத்தில் ஒரு எண்ணம் என்னை ஏன் எல்லோரும் அடிக்கிறார்கள். எனக்கு படிக்க வேண்டும் என்று தான் விருப்பம் ஆனால் படிக்கிறது எதுவும் மனதில் நிற்பது இல்லை. கணிதத்தில் இரண்டாவது ஸ்டெப்பை தாண்டினால் தலை சுற்றுகிறது நான் என்ன செய்ய.

இது போன்ற படிக்க விரும்பும் பிள்ளைகளும் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதோ ஒரு விதக்குறை இருக்கிறது. அதை புரிந்து கொண்டு அவர்களுடன் அன்பான முறையில் நடந்து, அவர்களுக்கு புரிகிற முறையில் கல்வி புகட்ட எப்பொழுது நமது நட்டு கல்விமுறை தன்னை வல்ற்துக்கு கொள்ளும்மோ.

4 comments:

Unknown said...

alugaiyum kavithai than, vitaikalum mulaika than, viluthukal pola nill, nalai ulagai vell....

Anbukku mathum sila ullam yengum palarathu ullam athai mathumee ninaikum, thavikum....
avar kalukku adithu sonnal bayathil manam layikathu athil....

sila pillai kalukku adithu sonnal than padippe varum....
aanal enna seiya nan muthal ragam....
Nalla karuthu...
Thodarathum Ungal padaippu...
Thoolai thooram nookiya payanam...
valthukal...
nandri,

Endrum Anbudan
selvi.G

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

Bava said...

Nice to read....Keep writing gud.....

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

thanks daaaaaaa.i will do my best insha allah