
பணி நிமித்தமாக வெளியூரில் தங்க ஆரம்பித்த காலம் முதல் வீட்டுக்குக் கடிதம் எழுதும் பழக்கம் இருந்து வருகிறது. என் நண்பர்கள் ஏன்டா இந்த கணினி யுகத்திலும் இப்படி என்று கிண்டல் செய்வார்கள். அந்த உறுத்தலால் இதற்கான காரணத்தை தேடி என் ஆழ்மன படிமத்தில் இறங்கி அகழ்வாராட்சி செய்தபோது சில தகவல்கள் கிடைத்தன. என் சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்த்த தொண்டி என்னும் பேரூர் அலை இல்லாத கடல். நீரில் ஓடும் மீன்களை காணும் அளவுக்கு கண்ணாடி மாதிரி கடல் நீர். நடுக்கடல் வரை சென்றுவர அருமையானப் பாலம். ஆண்டு தோறும் நடக்கும் படகு (வத்தல்) போட்டி ஒரு அருமையான அனுபவம். அப்படியே தெருவிற்குள் நடந்து வந்தால் கிச்சி கிச்சி தம்பலம் விளையாடும் அளவுக்கு பூ போன்ற சாக்கடைகள் அற்ற மணல் சாலை. எந்நேரமும் விளையாடுவதற்கு நண்பர்கள் கூட்டம். முள்ளு காட்டில் தோட்டம் கட்டி கூட்டான் சோறு விளையாட்டு. மாந்தோப்பில் மாங்காய் தின்றுவிட்டு கல்லு குளத்தில் முக்குளி குளியல். அப்படியே வீட்டுக்கு வந்தால் மஞ்சட்டியில் காய்ச்சிய மீன் ஆனத்துடன் சோறு ஊட்டுக்குழியில் ஊறவைத்த அதிரச மாவை அப்படியே சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் வாங்கிய உதைகள் . மச்சான் மச்சியின் கிண்டல்கள். மச்சியிடம் கதை கேட்டுக்கொண்டே இரவு கண்ணயர்வு. நோன்பு பெருநாள் சாயங்காலம் அலைவாய்கரை ( விழா காலங்களில் பெண்கள் மாற்றும் குழந்தைகள் மட்டும் குழுமும் இடம்) அம்மாவுடன் சென்று உறவினர்களுடன் விளையாடிவிட்டு விளையாட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்த நினைவு. இவ்வாறு நான் என் ஊருடன் நகமும் சதையுமாக இருத்தபோது. என் தந்தையாருக்கு திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. தொண்டியை விட்டு கிளம்பும் நாள் வந்தது என் மூதாதையர்களின் சத்தில் வளர்த்த மரங்கள் வரைந்த வழியனுப்பு மடலின் இறுதி சொல்லை வாசித்துவிட்டு என் கண்ணிரை பதிலாகக் கொடுத்து விட்டு ஊர்தியின் உள்பக்கம் தலையை இழுத்து என் தாய் மடியில் தஞ்சம் புகுந்தேன் . சொந்த ஊரை மிகவும் நேசிக்கும் சிறுவனுக்கு உண்டான வலியுடன் திருநெல்வேலியை அடைந்தேன். என்னை விட்டு ஊர் நினைவு அகலவே இல்லை அப்பொழுதுதான் என் தாத்தாவிடம் இருந்து எல்லோரின் நலம் பற்றியும் ஊர் செய்திகளுடன் கடிதம் ஒன்று வந்தது. அந்த நாள் முதல் என் அம்மாவிடம் மறுபடியும் கடிதம் எப்போது வரும் என்று நச்சரித்து வந்தேன் . மாதம் தோறும் ஒரு கடிதமாவது எப்படியும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இதனால் கடிதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து அது என் வாழ்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது . அந்த பழக்கம் தான் இன்று வரையிலும் என்னுடன் இணை பிரியா தோழனை போல் தொடருகிறது.
12 comments:
Nice thoughts about letter. Good Tamil writing.
nanri
Nice thought about letters. Good tamil writting.
சுவாரஸியமான எழுத்துநடை....அருமையான 'கடித'பதிவு:))
can you pls remove this wrod verification, it makes hard to put comments in tamil.
Thanks:)
உங்களை போன்ற அருமையான எழுத்தாளர்களின் பின்னுடம் எனக்கு மிக்கவும் உற்சாகம் அளிக்கிறது
pls can u tell me how to remove the word verification
Hi Haris... salaam... Unga tamil write-up is awesome... appadiye unga oora suththi paaka vachitteenga :)))
Tirunelveli la enga??
வஸ்ஸலாம், நன்றி நண்பரே. உங்களுக்கு பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் தெரியுமா ?
அங்கே தான் என் பெற்றோர் இருக்கிறார்கள். அதற்கு மூன்னர் பாளை மேட்டுத்திடலில் இருந்தோம்.
Thanks for removing the word verification:))
thodarnthu nerya eluthunga Harris!!
பின்னுடம் இட்ட அனைவருக்கும் நன்றி
I am proud of my dear friend. Its very nice yo hear you.
Post a Comment