
நான்
ஒரு கோப்பை தேனிர்
நிலவொளி நிறைந்த வானம் !
எங்களுக்கிடையிலான உரையாடல் தான் எத்துணை இனிமையானவை !
நிலவே நினைவு இருகிறதா ?
என் குழந்தை பருவத்தில்
நீ வான ஓடையில் அன்ன நடைப்போட்டு செல்லும் அழகை
ரசித்துக்கொண்டே வீடு நோக்கி செல்வேன் ;
என் விரல்களை பற்றிக்கொண்டு நீ அழைத்துச்
செல்லுவதை போன்ற உணர்வுடன் !
பள்ளங்களும் சாக்கடைகளும் என் கால்களை இடறி விட்டு
வலியால் கண்களில் நீர் அரும்பிய போதும் உன் மிதான
பார்வை மீண்டதே இல்லை !
உன் ஒளி
கீற்றால் என் விட்டு யூகலிப்டஸ் மரத்தின் கூரிய
இலைகளால் வெண் முத்தாக உருமாறி என் விட்டு
முற்றத்தில் துள்ளிகுதித்து குதூகலிப்பாய் !
என் கைகளை கன்னங்களில் முட்டுக் கொடுத்து
உன் விளையாட்டை குறுஞ் சிரிப்புடன் கண்கொட்டாமல்
ரசித்துக்கொண்டே இருப்பேன் !
யூகலிப்டஸின் மென் காற்று அந்த தருணத்தை இன்னும்
இனிமையாக்கின !
முழு மதியே !
இப்பொழுதெல்லாம் உன்னுடன் உரையாடவும்
உன் விரல் பிடித்து நடக்கவும் இந்த அவசரகதி
வாழ்க்கை அனுமதிப்பதில்லை !