
ஊதுகுழல் உடையவனின்
குழல்களில் இருந்து அழகிய
நீர்குமிழ் ஒன்று வெளிப்பட்டு
காற்றில் மிதந்து மிதந்து
என் உள்ளங்கையில்
வந்து அமர்ந்தது .
அதை ரசித்துக் கொண்டு
மறுகையால் மூட முயல்கையில்
மிண்டும் காற்றில் மிதந்து.
சிறிது தொலைவுச் சென்றதும்
சூரியனின் வெம்மையால்
வெடித்துச் சிதறியது.
